--- --:--:-- --

விஜய் வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார் – மாணிக்கம் தாகூர் பாராட்டு

10

காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் தனது சமூக வலைதள பக்கத்தில், “2026 தேர்தலுக்கு முன்பே திமுக “ஆட்சியில் பங்கு தமிழகம் ஏற்காது என்று வெளிப்படையாக அறிவித்தது. அதற்கு மக்கள் தங்களின் தீர்ப்பை வழங்கிவிட்டார்கள். தமிழக மக்கள் ஆட்சியில் பங்கு பெற வேண்டும் என்று கூறிவிட்டனர்.ஒரு புதிய வரலாறு எழுதப்படுகிறது.

 

கூட்டணி கட்சிகளுக்கு என்றும் அதிகாரத்தில் பங்கு வழங்கப்படும் என்று கூறிய த.வெ.க தலைவர் விஜய் தனது வாக்குறுதியை காப்பாற்றியுள்ளார். தற்போது, 59 ஆண்டுகளுக்குப் பிறகு, கதர் அணிந்த இரு காங்கிரஸ் அமைச்சர்கள் அமைச்சரவையில் இடம் பிடிக்கிறார்கள்.

 

என்னைப் போன்ற ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுக்கு இது உணர்ச்சிபூர்வமான, வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம். 36% கமிஷன் அரசியலிலிருந்து, ஊழல் இல்லா ஆட்சிக்குத் தமிழகத்தை கொண்டு செல்ல வேண்டும்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

Leave a Reply

Right Menu Icon