சென்னை ஓஎம்ஆர் சாலை சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் உள்ள ஒரு ஐடி நிறுவனத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்து காரணமாக அங்கு பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியர்கள் அனைவரும் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்ட நிலையில், தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.