பயணிகளை தரக்குறைவாக நடத்தும் பணியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. நிறுத்தத்தில் ஒரு பயணி நின்றால் கூட பேருந்தை நிறுத்தி அவரை ஏற்றிச் செல்லவேண்டும். பயணிகளுக்கு இடையூறு செய்யும் வகையில் பேருந்தை நிறுத்த கூடாது.
இடமில்லை என்று பெண் பயணிகளை இறக்கி விட கூடாது. அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்ளவும் கூடாது என எச்சரித்துள்ளது. பயணிகளுடன் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது.