திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்து அரங்கில் வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருவாரூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாகவும் அது துர்நாற்றத்துடன் பொங்கி வந்ததால் யாரும் குடிக்கவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.