ஆட்சியர் தலைமையில் நடந்த கருத்தரங்கில் கெட்டுப்போன மில்க் ஷேக்..!

திருவாரூரில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற நுகர்வோர் விழிப்புணர்வு குறித்த கருத்து அரங்கில் வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

திருவாரூரில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நுகர்வோர் விழிப்புணர்வு குறித்து கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் உணவு பொருட்களில் கலப்படத்தை கண்டுபிடிப்பது குறித்து செய்முறை விளக்கம் அளிக்கப்பட்டது.

 

இந்த நிலையில் கருத்தரங்கில் கலந்து கொண்டவர்களுக்கு வழங்கப்பட்ட பாதாம் மில்க் ஷேக் கெட்டுப் போயிருந்ததாகவும் அது துர்நாற்றத்துடன் பொங்கி வந்ததால் யாரும் குடிக்கவில்லை என்றும் பலர் புகார் தெரிவித்தனர். இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 


ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் பலி..!

திருவண்ணாமலை அருகே ஏரியில் சிக்கி தவித்த ஆட்டை மீட்க சென்ற இருவர் மீன்பிடி வலையில் சிக்கி உயிரிழந்தனர். வெங்கடா மற்றும் ரமேஷ் ஆகிய இருவரும் ஏரி அருகே ஆடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டி சென்றனர்.

 

அப்பொழுது ஆடு ஒன்று ஏரியில் சிக்கிக்கொண்டதால் அதனை காப்பாற்ற இருவரும் தண்ணீரில் இறங்கியுள்ளனர். இருவரும் எதிர்பாராத விதமாக மீன்பிடி வலையில் சிக்கி தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

 

தகவல் அறிந்த போலீசார் இருவரின் உடல்களை உடற்கூறு ஆய்வுக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 


12ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை..!

திருச்சியில் பனிரெண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தோழியின் தாய், தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்சி மாநகரை சேர்ந்த சுரேஷ் என்பவர் காண்டக்ட் தொழில் செய்து வருகிறார்.

 

இவரது மகளுடன் பள்ளியில் படிக்கும் மாணவி அடிக்கடி வீட்டிற்கு வந்துள்ளார். இதனை பயன்படுத்தி சுரேஷ் தனது தோழியிடம் தவறாக நடந்துள்ளார். சுரேஷ் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து சுரேஷ், அவரது மனைவியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 


மத்திய அமைச்சர் நிதின் கட்கரியிடம் ரூ.10 கோடி கேட்டு மிரட்டல்..!

த்திய அமைச்சர் நிதின் கட்கரியின் தொலைபேசிக்கு மர்ம நபர் பணம் கேட்டு மிரட்டல் விடுதலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 

மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் அவரது இல்லம் அமைந்துள்ளது. இந்த நிலையில் அவரது தொலைபேசிக்கு ஒரு நபர் அழைத்துள்ளார். 10 கோடி ரூபாய் தரவேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது.

 

மேலும் பணம் கொடுக்காவிட்டால் தாக்குவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது. இது குறித்து அலுவலக ஊழியர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

 


சாலையில் ஆடையின்றி சென்ற இளம் பெண்ணை காத்த பெண் போலீஸ்..!

நாகர்கோவிலில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆடையின்றி சாலையில் சென்று கொண்டிருந்தார். அதை பார்த்த பெண் போலீஸ் ஒருவர் அந்த பெண்ணுக்கு ஆடையை சுற்றி மானம் காத்தார்.

 

இந்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது. அந்த பெண்ணை ஆதரவற்றோர் மையத்தில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 


உயிரிழந்த மனைவிக்கு கோயில் கட்டி கும்பிடும் அதிசய கணவர்..!

திருப்பத்தூர் அருகே உயிரிழந்த மனைவிக்கு ஆறு அடிக்கு சிலை வைத்துள்ளார் அவரது கணவர். கோவில்பட்டி திருப்பத்தூர் அடுத்த மாங்கனூர் பகுதியை சேர்ந்த சுப்ரமணி – ஈஸ்வரி தம்பதிக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கடந்தாண்டு மனைவி ஈஸ்வரி உயிரிழந்தார்.

 

35 வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த மனைவியின் நினைவாக அவருக்கு சிலை வைத்து கோவில் கட்டியுள்ளார் கணவர் சுப்பிரமணி. அத்துடன் கோயிலில் தினமும் இரண்டு வேளை பூஜை செய்து வணங்கி வருகிறார். சுப்பிரமணியனின் இந்த செயல் அந்த பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

 


இந்தியாவின் வட மாநிலங்களில் உணரப்பட்ட நிலநடுக்கம்..!

ப்கானிஸ்தானில் இந்து கோஷ் மலை தொடரை மையமாகக் கொண்டு 6.8 என்ற ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

 

பாகிஸ்தான், தஜகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளிலும் நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஐரோப்பிய நடுநடுக்கவியல் மையம் தகவல் தெரிவித்துள்ளது. டெல்லி, பஞ்சாப், காஷ்மீர் உள்ளிட்ட பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.

 


ராஜஸ்தானில் ராட்டினத்தின் கேபிள் அறுந்து விழுந்து விபத்து..!

ராஜஸ்தானில் பொருட்காட்சியில் நிறுவப்பட்டிருந்த ராட்டினத்தின் கேபிள் ஒயர் அறுந்து விழுந்த விபத்தில் 17 பேர் படுகாயம் அடைந்தனர். அஜ்மீர் நகரில் உள்ள கும்பம் நகர் என்ற பகுதியில் நடைபெற்று வரும் பொருட்காட்சியின் ஒரு பகுதியாக ராட்டினம் ஒன்று நிறுவப்பட்டிருந்தது.

 

இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் ஏரி சவாரி செய்துள்ளனர். அப்பொழுது ராட்டினத்தின் கேபிள் ஒயர் திடீரென அறுந்துள்ளது. இந்த விபத்தில் ராட்டினத்தில் இருந்த 17 பேர் படுகாயம் அடைந்தனர்.

 

அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர். விபத்து குறித்து விசாரித்து வருவதாக ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 


திருப்பூரில் பூட்டிய வீட்டில் ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்து

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே பூட்டி இருந்த வீட்டில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி தனது குடும்பத்தினருடன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியூர் சென்றார்.

 

அந்த வீட்டின் ஜன்னலில் இருந்து புகை வெளியேறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.