அஜித் தன் ரசிகர்களுக்கு வைத்த வேண்டுகோள்!

டிகர் அஜித் தற்போது மலேஷியாவில் கார் ரேஸில் பங்கேற்று வரும் நிலையில், அவரை காண ஏராளமான ரசிகர்கள் நேரில் வருகின்றனர்.

 

12 மணி நேரம் நடக்கும் அந்த ரேஸில் அஜித் டீம் கலந்துகொள்கிறது. அஜித்தை பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் அந்த இடத்திற்கு ஏராளமானோர் படையெடுக்கின்றனர்.

 

இந்நிலையில் ரசிகர்களுக்கு அஜித் ஒரு வேண்டுகோள் வைத்து இருக்கிறார். “மற்ற டீம்களை தொந்தரவு செய்யாதீர்கள். உங்கள் பெயர் மட்டுமின்றி என் நற்பெயரும் இதில் இருக்கிறது.”

“அதனால் யாரையும் தொந்தரவு செய்யவேண்டாம் என எல்லோரிடமும் சொல்லுங்கள்” என அஜித் தெரிவித்தார்.


அமரன் பட வெற்றிக்கு பிறகு சம்பளத்தை உயர்த்திய சாய் பல்லவி..!

சாய் பல்லவி, தமிழ் சினிமாவில் இருக்கும் நடிகைகளில் ரசிகர்களுக்கு மிகவும் தனியாக தெரிபவர்.கஸ்தூரிமான் படம் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சில படங்களில் நாயகி தோழியாகவே நடித்து வந்தார். அதன்பின் மலையாள படமான பிரேமம் பெரிய ரீச் கொடுக்க இப்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நாயகிகள் லிஸ்டில் டாப்பில் உள்ளார்.

 

கடைசியாக இவரது நடிப்பில் அமரன் படம் வெளியானது. சிவகார்த்திகேயனுடன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்த இப்படம் மாபெரும் ஹிட்டாக அமைந்தது.

 

இப்படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி நடிப்பில் உருவாக இருக்கும் தலைவர் 173 படத்தில் சாய் பல்லவி நடிக்க கமிட்டாகியுள்ளாராம்.படத்தை முதலில் சுந்தர்.சி இயக்குவதாக கூறப்பட்டது, ஆனால் ராம்குமார் பாலகிருஷ்ணன் தான் இயக்குகிறார் என்கின்றனர்.

 

இந்த படத்தில் சாய் பல்லவி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் இப்படத்திற்காக சாய் பல்லவி ரூ. 15 கோடி வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.


திமுகவை பற்றி பேச எடப்பாடிக்கு தகுதியில்லை: ஆர்.எஸ்.பாரதி

னைத்து தரப்பு ஆதரவை தி.மு.க பெற்றுள்ளதால் அமலாக்கத்துறையை வைத்து மத்திய அரசு மிரட்டுகிறது என தி.மு.க அமைப்புச்செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை விசாரணையை துணிச்சலாக நாங்கள் எதிர்கொள்வோம். மடியில் கனமில்லை என்பதால் வழியில் பயமில்லை.

 

சம்பந்தி வீட்டில் ரெய்டு நடந்தவுடன் முகத்தை மூடிக் கொண்டு டெல்லி சென்றவர்தான் எடப்பாடி பழனிசாமி. எடப்பாடி தி.மு.க.வை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்றும் கூறினார்.


கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு..!

மிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு வழங்க வேண்டிய 7.35 டி.எம்.சி. தண்ணீரை, காவிரியில் திறந்து விட கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

 

நடப்பாண்டில் இதுவரை 158 டி.எம்.சி. நீரை கர்நாடகா திறந்து விட்டிருக்க வேண்டும் என்ற நிலையில், நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் தமிழ்நாட்டுக்கு 315.76 டி.எம்.சி. நீர் கிடைத்துள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் 46வது இன்றைய கூட்டத்தில் மேகதாது அணை குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லை.


மசோதாவை ஜனாதிபதிக்கு அனுப்பிய ஆளுநர் ஆர்.என்.ரவி..!

மிழ்நாடு சட்டப்பேரவையில் 2 முறை நிறைவேற்றப்பட்ட சித்த மருத்துவ பல்கலைக்கழக மசோதாவை ஜனாதிபதிக்கு ஆளுநர் அனுப்பி வைத்தார். 2022 மற்றும் கடந்த அக்டோபரில் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாவை ஆளுநர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.

 

மசோதாவில் திருத்தங்கள் வேண்டும் எனச் சொல்லி ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்து வந்த நிலையில் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்தார்.


கேண்டிடேட்ஸ் செஸ் தொடரில் பிரக்ஞானந்தா முதலிடம்!

FIDE Circuit தொடரில் புள்ளிகள் அடிப்படையில் தமிழக செஸ் வீரர் பிரக்ஞானந்தா முதலிடம் பிடித்தார். புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்த பிரக்ஞானந்தா கேண்டிடேட்ஸ் செஸ் தொடருக்கு தேர்வாகி உள்ளார்.

 

கேண்டிடேட்ஸ் தொடரில் வெற்றி பெறும் நபர் உலக செஸ் சாம்பியன் பட்டத்திற்கு போட்டியிடுவார்.


தமிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் பதிவேற்றம்..!

மிழகத்தில் 99.27% எஸ்.ஐ.ஆர் படிவங்கள் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நவ. 4-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 

அதன்படி தமிழகத்தில் இதுவரை 99.91% (6,40,59,971 பேர்) எஸ்ஐஆர் படிவங்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் 99.27% (6,36,44,038 பேர்) பதிவேற்றம் செய்துள்ளதாகவும் இந்திய தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.

 

எஸ்ஐஆர் படிவங்களைப் பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை பூர்த்தி செய்து, வரும் டிச. 11-ஆம் தேதி வரை பிஎல்ஓ-க்கள் அல்லது வாக்காளா் உதவி மையத்தில் சமர்ப்பிக்கலாம்.


நீலகிரி மாவட்டத்தில் புதிதாக 2 ஊராட்சி ஒன்றியங்கள்..!

நீலகிரி மாவட்டத்தில் புதிதாக இரு ஊராட்சி ஒன்றியங்களை உருவாக்கி அரசாணை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. குந்தா மற்றும் பந்தலூர் ஒன்றிய உருவாக்கம் குறித்த கருத்து அல்லது ஆட்சேபனைகளை அடுத்த 6 வாரங்களில் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


விஜயின் புதுச்சேரி பொதுக்கூட்டத்திற்கு கட்டுப்பாடுகள்..!

புதுச்சேரியில் காலை 10.30 மணிக்கு விஜயின் பொதுக்கூட்டம் நடை பெறுகிறது. 5,000 பேருக்கு மட்டுமே நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி; பாஸ் இல்லாமல் யாரும் உள்ளேவர முடியாது. விஜய் நிகழ்ச்சிக்கு குழந்தைகள், முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வர வேண்டாம். விஜய்யின் பொது கூட்டத்திற்கு காலை 10.30 முதல் 12.30 மணி வரை மட்டுமே அனுமதி.

 

விஜய்யின் பொதுக்கூட்டத்திற்கு 1,000க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பு.பள்ளி நேரம் தொடங்கிய பின்தான் விஜய் வரவேண்டும்; பள்ளி முடிவதற்கு முன் நிகழ்ச்சியை முடித்து விட வேண்டும். தமிழகத்தை சேர்ந்தவர்கள் வருவதைத் தடுக்க தமிழக போலீசாரின் உதவியை நாடியுள்ளோம் என்று டி.ஜி.பி.சத்திய சுந்தரம் தெரிவித்துள்ளார்.