மாவீரன் அழகுமுத்துக் கோனுக்கு விஜய் புகழாரம்..!

மாவீரன் அழகுமுத்துக் கோனின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

இதனையொட்டி, தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரியும் செலுத்த முடியாது, மன்னிப்பும் கேட்க முடியாது என்று வெள்ளையர்களிடம் வீராவேசத்துடன் பேசி, பீரங்கி முன்பு நெஞ்சை நிமிர்த்தி, குண்டு பாய்ந்து வீர மரணமடைந்த மாவீரனின் பிறந்தநாளில் அவரது தீரத்தையும் தியாகத்தையும் போற்றுவோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மனைவியை கட்டிப் போட்டு தாக்கிய கணவன்..!

னைவியின் கைகளை கட்டிப் போட்டு கணவர் தாக்கிய அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது. கட்டிலில் இருந்த மனைவியின் 2 கைகளையும் பின்னால் கயிற்றால் சேர்த்து கட்டியுள்ளார்.

பின்னர் கீழே தள்ளி முதுகு, வாய், தலை உள்ளிட்ட பகுதிகளில் தாக்கியுள்ளார். வலி தாங்காமல் மனைவி கதறுவதையும் பொருட்படுத்தவில்லை. இந்த வீடியோ எங்கு? எப்போது? யார்? எடுத்தது என தெரியவில்லை.

இறந்ததாக கூறப்பட்ட குழந்தை உயிரோடு எழுந்த அதிசயம்!

றந்ததாக அறிவிக்கப்பட்ட குழந்தை, 12 மணிநேரத்துக்கு பின் உயிரோடு எழுந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவில், ஒரு பெண்ணுக்கு 7-வது மாதமே குழந்தை பிறந்தது.

பிரசவம் நடந்த ஹாஸ்பிடலில் குழந்தையை இரவு முழுவதும் ICU-வில் வைத்து கண்காணித்த டாக்டர்கள், இறந்துவிட்டதாக அறிவித்தனர். குழந்தையை புதைக்க மாஸ்க்கை விலக்கிய போது, அசைவு தெரிந்தது. உடனே குழந்தையை வேறொரு ஹாஸ்பிடலில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர்.

TTD-ல் 1,000 மாற்று மதத்தினர் வேலை: மத்திய அமைச்சர் புகார்

திருப்பதி திருமலை தேவஸ்தானத்தில் மாற்று மதத்தினர் 1,000 பேர் வேலை பார்ப்பதாக மத்திய அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

திருப்பதியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்து மதம் மற்றும் சனாதனத்தின் மீது நம்பிக்கை இல்லாதோர் எப்படி திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரியலாம் என கேள்வி எழுப்பினார். இதுகுறித்து முழு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

தனது தந்தையால் சுட்டுக் கொல்லப்பட்ட ராதிகா..!

நேற்று ராதிகாவுக்கு தெரியாது, தான் தனது தந்தையாலேயே சாகப்போகிறோம் என்று. சுட்டுக்கொல்லப்பட்ட அந்த நொடிக்கு முன்னதாக காய்ச்சல் உள்ளிட்ட உடல்நலப் பிரச்னையால் ஓய்வெடுத்துக் கொண்டிருந்துள்ளார்.

 

மேலும், தனது அம்மா மஞ்சுவுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கவும் ஏற்பாடு செய்துள்ளார் ராதிகா.


லோகேஷ் கனகராஜ் மீது செம கோபத்தில் லியோ நடிகர் சஞ்சத் தத்..!

விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கிய லியோ படத்தில் வில்லனாக ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் நடித்து இருந்தார். கேஜிஎப் 2 படத்தில் அவர் நடித்து இருந்த நிலையில் அந்த படம் மிகப்பெரிய வசூலை குவித்தது, அதனை தொடர்ந்து தான் லியோ படத்தில் சஞ்சய் தத் நடித்து இருந்தார்.

 

இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய சஞ்சய் தத் தான் லோகேஷ் மீது கோபமாக இருப்பதாக கூறி இருக்கிறார். ”லியோ படத்தில் பெரிய ரோல் கொடுக்கவில்லை, எனது திறமையை லோகேஷ் சரியாக பயன்படுத்தவில்லை, He wasted me” என அவர் காரணத்தையும் தெரிவித்துள்ளார்.


புதிய கார் வாங்கியுள்ள பிக்பாஸ் பிரபலம் நமீதா மாரிமுத்து..!

பிக்பாஸ், விஜய் தொலைக்காட்சியில் படு பிரம்மாண்டமாக ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சி. முதல் சீசன் கிடைத்த வரவேற்பு அடுத்தடுத்த சீசன்கள் ஒவ்வொன்றிலும் நிறைய வித்தியாசமான விஷயங்களை வைத்து ஒளிபரப்பினார்கள்.

 

இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலமானவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் நமீதா மாரிமுத்து. பிக்பாஸ் வரலாற்றிலேயே முதல்முறையாக திருநங்கையாக மாடலும் நடிகையுமான நமீதா மாரிமுத்து களமிறங்கினார்.

 

ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இவர் நீண்ட நாட்கள் விளையாடவில்லை, பாதியிலேயே வெளியேறினார்.அதன்பின் நிறைய போட்டோ ஷுட்கள் செய்து செம பிஸியாக இருக்கும் நமீதா மாரிமுத்து தற்போது புதிய கார் ஒன்றை வாங்கியுள்ளார். காரை வாங்கிக்கொண்டு வரும் வீடியோவை அவர் வெளியிட மக்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.


சுற்றி வளைத்த போலீஸ்.. மகள் ஜோவிகா செய்த விஷயம்!

பிரபல நடிகரின் மகள் என்ற அடையாளத்தோடு சினிமாவில் நாயகியாக நடிக்க தொடங்கியவர் வனிதா விஜயகுமார். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.

 

வனிதா தற்போது தனது மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரிப்பில் ‘மிஸ்ஸஸ் & மிஸ்டர்’ என்ற படத்தை இயக்கி உள்ளார். படத்தின் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வரும் வனிதா தற்போது பகிர்ந்த விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

அதில், ” என் அம்மா வீட்டில் இருந்து என்னை போலீஸ் ஸ்டேஷனுக்கு வேனில் அழைத்து செல்கிறார்கள். எனது மகள் ஜோவிகா என்னை தனியாக விடமாட்டேன் என்று அவளும் வண்டியில் ஏறிவிட்டாள்.

 

வண்டியில் எனது பக்கத்திலேயே நின்றுகொண்டு இருந்தாள். வண்டியில் இருந்து இறங்கும்போது பெண் போலீஸ் வந்துவிட்டார்கள். அப்போது ஜோவிகா எங்கோயோ பார்த்துக்கொண்டு அப்படியே இறங்கி ஓடி விடுங்கள் என்று சொன்னாள்.

 

ஆனால், அப்போது எனக்கு அது புரியவில்லை. நான் எங்கு போவேன் நீ என்ன பண்ணுவ என்று கேட்டேன். அதெல்லாம் எனக்கு தெரியும். எந்த எம்பெசிக்கு போகனும் என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும் என்று கூறினார்” என்று தெரிவித்துள்ளார்.


குரூப் 4 தேர்வுக்கான வினாத்தாள் கசியவில்லை – டி.என்.பி.எஸ்.சி விளக்கம்

துரை மாவட்டத்தில் ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கருவூலத்திலிருந்து வினாத்தாள்கள் அனுப்பி வைக்கும் பணி இன்று நடைபெற்றது. ஆனால், தனியார் பேருந்து மூலம் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. பேருந்து கதவில் ஏ4 சீட் மூலம் சீல் வைத்து அனுப்பப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

 

மேலும், வினாத்தாள் கசிய அதிக வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில், டி.என்.பி.எஸ்.சி தலைவர் பிரபாகர் இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அதில், ‘டி.என்.பி.எஸ்.சி வினாத்தாள் கசியவில்லை.

 

அதனால் தேர்வர்கள் அச்சப்பட தேவையில்லை. தனியார் பேருந்தில் வினாத்தாள் எடுத்துச் செல்லப்பட்டது குறித்து விளக்கம் கோரப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.