கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!

மேட்டுப்பாளையத்தில் தரையோடு தரையாக வெட்டப்பட்டிருந்த விவசாய கிணற்றுக்குள் முதலை ஒன்று புகுந்தது.

 

வனத்துறையினர் வருவதற்குள் அருகில் இருந்த புதர்களுக்குள் முதலை தப்பிக்க முயன்றதால் அதை பிடிக்க வனத்துறையினர் வலைகளை கட்டினர். பின்னர் அதனை பிடித்து சென்றனர்.

 


கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குடும்பத்த தகராறு இரண்டு குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தாய் தற்கொலை செய்து கொண்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 2 வயது குழந்தை உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

பிரகாசுக்கும் அவரது மனைவி கோமதிக்கும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இது தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. நேற்று கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் இரண்டு குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்து கோமதி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கோமதியின் மகன் உயிர் இழந்த நிலையில் மகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

 


ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!

கேரளாவில் ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட குழந்தையின் தொண்டையில் முறுக்கு சிக்கிக் கொண்டதால் குழந்தை இறந்து போனது. கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிகரா பகுதியை சேர்ந்தவர் விஜயஸ் என்பவரின் மகள் வைஷ்ணவி ஒரு வயது நிரம்பிய வைஷ்ணவி இன்று காலை ஆசை ஆசையாக முறுக்கு சாப்பிட்டு உள்ளார்.

 

தாய்க்கு தெரியாமல் எடுத்து சாப்பிட்டதாக தெரிகிறது. அப்பொழுது முறுக்கு தொண்டையில் சிக்கிக்கொண்டது. அழுத குழந்தையை தாய் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார்.

 

வரும் வழியிலேயே குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறிவிட்டனர். வைஷ்ணவியின் தந்தை சொந்த வேலை காரணமாக பாலக்காடு சென்ற பொழுது இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுதது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 


பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!

ட்டப்பிடாரத்தில் கஞ்சா போதையில் இருசக்கர வாகனத்தில் தெருக்களில் வீலிங் செய்த மூன்று பேரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். பிரதீப்குமார் தெருகளில் அதிவேகமாக வீலிங் செய்ததாக கூறப்படுகிறது.

 

அந்த வழியாக வந்த மூதாட்டி செண்பகத்தம்மாள் மீது மோதியதில் அவர் காயமடைந்தார். இந்த மூன்று பேரையும் கைது செய்ய வலியுறுத்தி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற அந்த பகுதி மக்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.

 


ஆளுநர் வழக்கு விசாரணை – தமிழிசை வரவேற்பு

ளுநரும், முதல்வரும் அமர்ந்து பேசினால் தான் தீர்வு கிடைக்கும் என்று தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றமும் பதிவு செய்துள்ளதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

 

தான் வலியுறுத்தி வந்ததை உச்ச நீதிமன்றம் இப்போதும் பதிவு செய்துள்ள மகிழ்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். சண்டை போட்டுக் கொண்டு நீதிமன்றங்களுக்கு செல்லாமல் இணக்கமாக செயல்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 


வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!

நெய்வேலி அருகே வெறிநாய் கடித்து ஒரு மாதத்திற்கு பிறகு சிறுவன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிக்கும் அன்பழகன் என்பவரின் 12 வயது மகன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது நாய் கடித்துள்ளது.

 

இதனால் படுகாயம் அடைந்த சிறுவன் பண்ருட்டி அரசு மருத்துவமனைகள் சேர்க்கப்பட அவருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் ஒரு மாதமாகவே சிறுவன் உடல்நலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

 

சிறுவனின் நடவடிக்கை மாறியதால் பதற்றம் அடைந்த பெற்றோர் அவனை கடலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல அவர்கள் புதுச்சேரி அரசு மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். ஆனால் செல்லும் வழியில் ஆம்புலன்சிலே பரிதாபமாக உயிரிழந்தான்.

 

தனது மகனுக்கு ராபிஸ் வைரஸ் தாக்கியதாக கடலூர் அரசு மருத்துவமனை நிர்வாகிகள் கூறியதாகவும் பிரேத பரிசோதனைக்கு பின்னர் உடலை தராமல் எரியூட்டியதாகவும் சிறுவனின் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

 

நாய்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் இதற்கும் தங்களுக்கும் சம்பந்தம் இல்லை என்று குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

 


ரூ.25 லட்சம் மோசடி.. பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது..!

சென்னையில் 25 லட்சம் ரூபாய் பணம் மோசடி ஈடுபட்டதாக பாஜக பிரமுகர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர்.

 

சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த வினோத் என்பவரிடம் ரூ.25 லட்சம் பணமோசடி ஈடுபட்டதாக புகார் கைது செய்யப்பட்ட ஜானகிராமன் பாஜக மாவட்ட ஓபிசி அணி பொதுச் செயலாளராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 


பொங்கல் பண்டிகைக்கு கரும்பு, சர்க்கரை உடன் மஞ்சளை வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்..!

மிழக அரசு பொங்கல் தொகுப்புடன் மஞ்சளை கொள்முதல் செய்த பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று கிருஷ்ணகிரி மாவட்டம் மஞ்சள் விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

 

கிருஷ்ணகிரியில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு 100 ஏக்கர் பரப்பளவில் ஏராளமான விவசாயிகள் மற்றும் சாகுபடி செய்துள்ளனர். இந்நிலையில் மழை காரணமாக மஞ்சள் சாகுபடியில் புழு தாக்குதல் ஏற்பட்டு மகசூல் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் கூறுகின்றனர்.

 

மருந்துகள் அடித்தும் புழுக்களை கட்டுப்படுத்த முடியாததால் உரிய மருந்துகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் பொங்கல் பண்டிகைக்கு அரிசி, சர்க்கரை, மற்றும் கருப்பு வழங்குவது போல மஞ்சளை கொள்முதல் செய்து வழங்கினால் விவசாயிகள் இழப்பை தடுக்க பெரு நிதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றனர்.

 


மதுரை ED அலுவலகத்தில் 13 மணி நேர சோதனை நிறைவு..!

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

 

சினிமாவை மிஞ்சும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு, அங்கித் திவாரியை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

 

திண்டுக்கல் அரசு மருத்துவமனையின் துணை கண்காணிப்பாளர் சுரேஷ் பாபு என்பவரை, வழக்கு ஒன்றில் இருந்து விடுவிக்க 51 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்ட புகாரில், மதுரையில் பணியாற்றும் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி என்பவர், நேற்று கைது செய்யப்பட்டார்.

 

சினிமாவை மிஞ்சும் வகையில் அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறையினர், விரட்டி பிடித்து கைது செய்தனர். அதன் பிறகு, அங்கித் திவாரியை திண்டுக்கல் செட்டி நாயக்கன்பட்டியில் உள்ள லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.

 

பின்னர், அங்கித் திவாரி மீதான புகாரின் ஆதாரங்களை சமர்ப்பித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், அவரது அறையை மட்டும் சோதனையிட அனுமதி கோரினர். இதையடுத்து, அமலாக்கத்துறையினர் அனுமதி வழங்கியவுடன், அதிரடியாக உள்ளே நுழைந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர், அங்கித் திவாரியின் அறையை சோதனையிட்டனர்.

 

அதில் கிடைத்த முக்கிய தகவல்கள் என்ன என்பது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட இருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரி எத்தனை பேரிடம் லஞ்சம் பெற்றார்? யாரிடம் மிரட்டலில் ஈடுபட்டார் என்ற தகவல்கள் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு லஞ்சத்தில் பங்கு அளிக்கப்பட்டதா? அங்கித் திவாரியின் வீடு , அவர் தொடர்புடைய இடங்களில் ஆவணங்களை சேகரித்து, அதன் பிறகு விசாரணையை தீவிரப்படுத்தவும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

 

மதுரையில் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நடத்தப்பட்ட சோதனை எதிரொலியாக, சென்னை சாஸ்திரி பவனில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் பாதுகாப்புக்காக துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் போலீஸ் படையினர் நிறுத்தப்பட்டனர். விதிமீறல்களில் ஈடுபடுவோரை சோதிக்கும் அதிகாரம் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி ஒருவரே கையூட்டு பெற்று, கையும் களவுமாக சிக்கியுள்ளது இந்திய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.