திருப்பூர் அம்மாபாளையம் நடுநிலைப் பள்ளியில் குடியரசு தின விழா..! ..!

பெற்றோர்கள் வழி தவறினால் அடுத்த  தலைமுறையை காப்பாற்றவே முடியாது. திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ம.ந. இளங்கோ பேச்சு..!

 

திருப்பூர்,திருமுருகன்பூண்டி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 76 ஆவது குடியரசு தின விழா பள்ளி வளாகத்தில் நடந்தது. விழாவிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.இடைநிலை ஆசிரியர் சுரேஷ் வரவேற்றார்.

 

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட திருமுருகன்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் ம.ந. இளங்கோ 76 வது குடியரசு தின தேசிய கொடியை ஏற்றி வைத்து பள்ளியின் என்.சி.சி., ஜே.ஆர். சி , சாரண, சாரணியர் மற்றும் சாரணிய குழந்தைகளுக்கான 3, 4, 5 ம் வகுப்பு படிக்கும் கப், புல் புல் மாணவர் மாணவர்களின் அணி வகுப்பு மரியாதையை ஏற்று சிறப்புரை ஆற்றினார்.

 

அப்போது அவர் பேசியதாவது: தற்போது குழந்தைகள் எந்த நிலைக்கு செல்வார்கள் என்று பெற்றோர்களுக்கு தெரிவதில்லை.இதனை ஆசிரியர்கள் மாணவ மாணவிகளை கட்டுப்படுத்தி வைக்க வேண்டும். இப்போது இருக்கும் சட்டத்தினால் ஆசிரியர்கள் இதனை மீற முடிவதில்லை. நானும் நகராட்சி பள்ளியில் படித்தவன் தான். இப்பொழுது ஆசிரியர்கள் பள்ளிக்கு வரும் பொழுது இன்று எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று சாமியை கும்பிட்டு வர வேண்டிய சூழ்நிலை உள்ளது.

 

செய்திகளை அந்த காலத்தில் பத்திரிகைகளிலும், டிவியிலும் பார்க்க வேண்டிய இருந்தது. ஆனால் இப்பொழுது கையடக்க செல்போனில் பார்க்கும் நிலை வந்துவிட்டது. இப்பொழுது நடந்து விழாவை இந்த நிமிடத்தில் உலகம் முழுவதும் பார்க்கலாம். அந்த அளவிற்கு அறிவியல் வளர்ச்சி அடைந்துள்ளது. அறிவியல் எந்த அளவிற்கு வளர்ந்ததோ அதைவிட குற்ற சம்பவங்கள் இருமடங்கு கீழே சென்றுள்ளது.

 

இன்று நமது வாழ்க்கையில் செல்போன் என்பது அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது.அந்த சிறிய செல்போன் நம்மை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்துள்ளது. இப்பொழுது உள்ள பெற்றோர்கள் சாப்பிடவில்லை என்றால் செல்போன் பார்க்க கொடுக்கிறார்கள். மற்றவர்களோடு பேசும் பொழுது தொந்தரவு செய்யாமல் இருக்க செல்போன் கொடுக்கிறார்கள்.

 

இது தவறான முன் உதாரணமாகும். இப்பள்ளியில் மாணவர்களின் அணிவகுப்பை பார்க்கும் பொழுது பள்ளியில் 4 இல் ஒரு பங்கு மாணவர்கள் இந்த அணிவகுப்பில் கலந்து கொண்டு உள்ளார்கள். இவர்களை ஊக்கப்படுத்திய ஆசிரியர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள். சாரண சாரணிய குழந்தைகள் 15 நாட்களில் பயிற்சி பெற்று அணிவகுப்பில் பங்கேற்றுள்ளது ஒரு பெருமைக்குரிய விஷயமாகும். ஒரு சிறிய தூண்டுகோல் தான் ஒரு பெரிய வளர்ச்சியாக மாறினிருக்கிறது என்பது கண்கூடாக தெரிகிறது.

 

தற்போது நாட்டின் நிலைமை மது என்று இருந்தது இப்பொழுது கஞ்சா போன்ற போதை பொருட்கள் அதிகமாக புலங்கக் கூடிய நிலை வந்துவிட்டது. இது எங்கு போய் முடியும் என்று தெரியாது. ஆனால், குழந்தைகள் நினைத்தால் வருங்கால சந்ததியை காப்பாற்ற முடியும். குழந்தைகள் கூறினால் கண்டிப்பாக அவர்களது பெற்றோர்கள் கேட்பார்கள். குழந்தைகள் நினைத்தால் உலகத்தை மாற்ற முடியும். பெற்றோர்கள் வழி தவறினால் அடுத்த தலைமுறையை காப்பாற்றவே முடியாது.

 

பெற்றோர்கள் சரியாக வளர்த்தாத குழந்தைகள் தான் சமூக சீர் கேடாக மாறுகிறது. ஆயிரம் பேர் படிப்பு பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தும் பொழுது 50 மாணவர்கள் தான் கலந்து கொள்கிறார்கள். இதில் இருந்து என்ன தெரியுது என்றால் மீதம் இருக்கும் 950 மாணவர்களும் தோல்வி பயத்தினால் கலந்து கொள்ளாத நிலை தான் உள்ளது.

 

தோல்வி அடையும் பொழுது இந்த உலகம் நம்மை ஏளனமாக தான் பார்க்கும் என்று பயப்படுகிறார்கள். வெற்றி அடைந்தால் நீங்கள் சொல்வதெல்லாம் தத்துவங்கள். அதேசமயம் தோல்வி அடைந்தால் நீங்கள் என்ன கூறினாலும் அது எடுபடாது. ஆகவே உங்கள் வெற்றி படிப்பில் தான் உள்ளது. பெற்றோர்கள் வீட்டில் தாங்கள் நடந்து கொள்ளும் முறையை தான் குழந்தைகள் வெளியே செய்கிறார்கள்.

 

இந்த நிலைக்கு காரணம் பெற்றோர்கள் தான். ஐந்து வயது வரை குழந்தைகளை பெற்றோர்கள் அதிகமாக தாங்குகிறார்கள். ஆனால், எட்டாம் வகுப்பு வரும் பொழுது சரியாக கண்டுகொள்வதில்லை. இதனால் குழந்தைகளுக்கு என்ன நடக்கிறது என்று அவர்களுக்கு தெரிவதில்ல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்கிறோம். நாங்கள் குழந்தையை நன்றாகத்தான் வருகிறோம் என்கிறார்கள்.

 

ஆனால் அவர்களையும் மீறி குழந்தைகளின் மாற்றங்களை அறியாதபோது வீட்டில், வெளியில் குழந்தைகளின் நிலை மாறி விடுகிறது. எனவே குழந்தைகளை நாம் எப்பொழுதும் கண்காணிப்பிலே வைத்து இருந்தால் குழந்தைகள் நாம் எதிர்பார்க்கும் வளர்ச்சியை அடைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.

 

தொடர்ந்து 4 ம் வகுப்பு மாணவிகள் லக்ஷனா, பூவீதா ஆகியோரின் குடியரசு தினம் குறித்து பேசினார்கள். முடிவில் பட்டதாரி ஆசிரியர் சக்திவேல் நன்றி கூறினார். விழாவில் நகராட்சி தலைவர் குமார், துணைத்தலைவர் வளர்மதி உள்பட பள்ளி மேலாண்மைக்குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி வளர்ச்சிக்குழு மற்றும் முன்னாள் மாணவர் பேரவை நிர்வாகிகள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்துகொண்டனர்.


அரசுப் பள்ளி மாணவர்கள் குறித்து ஆளுநர் வேதனை..!

ரசுப் பள்ளி மாணவர்கள் 75% பேரால், 2ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களை கூட சரியாக படிக்க முடிவதில்லை என ஆளுநர் R.N.ரவி கூறியுள்ளார். குடியரசுத் தினத்தையொட்டி அவர் ஆற்றிய உரையில், “11 முதல் 99 வரையிலான இரட்டை இலக்க எண்களை மாணவர்களால் அடையாள காண முடிவதில்லை.

 

பலரால் கூட்டல், கழித்தல் கணக்குகளை கூட செய்ய முடிவதில்லை” என வேதனையுடன் தெரிவித்துள்ளார். அரசியல் வட்டாரத்தில் இது பேசுபொருளாகியுள்ளது.


‘மார்கழி’ பாடலை வெளியிட்ட மம்முட்டி படக்குழு..!

‘டொமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தின் ‘மார்கழி’ பாடலை, யூடியூப் தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளது. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், மலையாள ஸ்டார் மம்முட்டி நடித்துள்ள இந்தப் படம் கடந்த 23ஆம் தேதி ரிலீஸானது.

 

கிரைம் திரில்லர் பாணியில் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், கிளைமாக்ஸ் காட்சியில் மிகப்பெரிய ட்விஸ்ட் உள்ளதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


பத்ம விருது பெற்றவர்களுக்கு மோடி பாராட்டு!

த்ம விருது அறிவிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகத்தான சாதனைகளுக்காக தங்களை கௌரவிப்பதில் இந்தியா பெருமைக் கொள்வதாக அவர் கூறியுள்ளார்.

 

மேலும், தங்களின் அர்ப்பணிப்பு நிச்சயம் அனைவருக்கும் உத்வேகத்தை தரும் எனக் கூறியுள்ள மோடி, பத்ம விருதுகள் பெற்ற ஒவ்வொருவரும் கடின உழைப்புக்கும், லட்சியத்துக்கும் உதாரணமாக திகழ்பவர்கள் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.


அரிட்டாப்பட்டியில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா..!

ன்று அரிட்டாப்பட்டி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா நடத்தப்படுகிறது.மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டிக்கு அருகே 4,984 ஏக்கர் பரப்பளவில் சுரங்கம் அமைத்து டங்ஸ்டன் கனிமம் எடுப்பதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் அளித்திருந்தது.

 

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்ட நிலையில், இத்திட்டத்தைக் கைவிடக் கோரி சட்டப்பேரவையிலும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இதனையடுத்து, மதுரை டங்ஸ்டன் சுரங்கத் திட்டத்திற்கான ஏல உத்தரவை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்தது. இந்நிலையில், டங்ஸ்டன் சுரங்க திட்டத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுத்ததற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அரிட்டாப்பட்டி கிராம மக்கள் இன்று பாராட்டு விழா நடத்துகின்றனர்.

 

டங்ஸ்டன் சுரங்கத்திட்டம் ரத்தானதற்கு முழு முதற்காரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என குறிப்பிட்டுள்ளனர். இதற்கான அழைப்பிதழை அரிட்டாப்பட்டி, கிடாரிப்பட்டி, நரசிங்கம்பட்டி உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினர். இந்தப் பாராட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாப்பட்டி செல்கிறார்.


நாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று கொண்டாட்டம்..!

நாட்டின் 76ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் அரசு கட்டிடங்கள் வண்ண விளக்குகளால் ஜொலித்தன.

 

டெல்லியில் குடியரசுத் தலைவரும், சென்னையில் ஆளுநரும் கொடியேற்ற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மோசடி ராணி.. மொத்த குடும்பமும் போணி! காசுக்காக அப்பாவி ஆண்களுக்கு இலக்கு..! காவல் துறை நடவடிக்கை எடுத்தால் சிறப்பு..!

திருப்பூரில் அப்பாவி ஆண்களை மயக்கி காசு பறிக்கும் மோசடி ராணியால், பல குடும்பங்கள் சீரழியும் ஆபத்து உள்ளது. சொந்த மகளின் குடும்பத்தை சிதைத்து, மற்ற ஆண்களின் குடும்பத்தை நடுத்தெருவுக்கு இழுக்கும் பெண் மீது காவல்துறை உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் விக்டோரியா என்கிற ராணி (48). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகளுக்கு திருமணமாகிவிட்டது; மகன் கடை வைத்துள்ளார். மகன் முஸ்லீமாக மதம் மாறி விட்டார்.

 

திருப்பூரில் பணி புரிந்து கொண்டிருந்தபோது விக்டோரியாவுக்கு, திருப்பூர் மாஸ்கோ நகரில் உள்ள ஒரு நபருடன் கள்ளத் தொடர்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அந்த நபருக்கும் குடும்பம் உள்ள நிலையில், தனது கள்ள உறவை பயன்படுத்தி அந்த நபரிடம் இருந்து பணம், பொருட்களை விக்டோரியா பெற்று அனுபவித்து வந்துள்ளார்.

 

விக்டோரியாவின் மகன் வேறு மதத்தை சேர்ந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது மகள் தமிழரசிக்கு, சில வருடங்களுக்கு முன்பு மேஜர் ஆகாத நிலையில் 17 வயதில் விரும்பமின்றி, ரகசியமாக சர்ச்சில் வைத்து கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளார் விக்டோரியா. தமிழரசியின் கணவரான இராமநாதபுரத்தை சேர்ந்த அகஸ்டினுக்கு 20 வயது வித்தியாசம் இருந்த நிலையில், இருவருக்கும் இடையே மனமொத்த திருமண வாழ்க்கை அமையவிலை; இல்லற வாழ்க்கை கசந்தது.

 

திருமணமான சில மாதங்களில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்ததாக கூறப்பபடுகிறது. இருவரையும் சமாதானம் செய்து வைத்து நன்றாக வாழுங்கள் என்று கூற வேண்டிய இடத்தில் உள்ள தாய் விக்டோரியோ, சொத்து கிடைக்க வழிவகை செய்யாத மகளின் மீது எரிச்சல் அடைந்தார். மகளின் மீதான கோபத்தாலும் தனது சுய லாபத்திற்காகவும் மருமகனிடம் போய், நீங்கள் வேறு திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று கூறி இருக்கிறார்.

 

ஆனால், 2 பெண்களுடன் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த மகள் தமிழரசி (எ) ஜாஸ்மின் பற்றி விக்டோரியா சிறிதும் கவலைப்படவில்லை. ஏற்கனவே அதிக வயது வித்தியாசமுள்ள விருப்பமில்லாத திருமணம், துளியும் கருணை இல்லாத தாய் என தமிழரசியின் வாழ்க்கை இருண்டு போனது. வீட்டு மாதாந்திர கடன், குழந்தைகள் படிப்பு , குடும்பச்செலவு என மிகவும் நொடிந்து போன தமிழரசி வாழ்க்கையின் விரக்திக்கு சென்று தற்கொலை செய்து கொள்வதற்கும் ஒருசிலமுறை முயன்றிருக்கிறார்.

 

பேராசை பிடித்த விக்டோரியா, தனது வாழ்க்கையை நாசப்படுத்தி தனது மகளின் வாழ்க்கையை கெடுத்ததோடு, பல நல்ல குடும்பங்களில் ஆண்களை வளைத்துப் போட்டு பலரின் வாழ்க்கையில் விளையாடி இருக்கிறாரோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

 

விக்டோரியாவின் பின்னணி என்ன? யாரையெல்லாம் இதுபோல் காம வலை விரித்து வீழ்த்தி மோசடி செய்திருக்கிறார்? முதல் கணவர் யார்? அவரது தொழில் என்ன? என்பனவற்றை காவல் துறை விசாரித்தால், பல அதிரடி உண்மைகள் வெளிச்சத்துக்கு வரும்.இதுபோன்ற மோசடிகள் தொடராமல் இருக்க சட்டத்தின்படி விக்டோரியாவை விசாரித்து, உரிய தண்டனை வழங்கினால் மட்டுமே , மோசடி ராணிகள் உருவாகாமல் இருப்பார்கள்; பல நல்ல குடும்பங்கள் காப்பற்றப்படும். திருப்பூர் காவல் துறை இந்த விஷயத்தில் தயவு தாட்சண்யம் பார்க்காமல் உடனே விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


ரேஷனில் பாமாயில், பருப்பு நிறுத்தமா? அரசு விளக்கம்

ரேஷனில் மலிவு விலையில் தற்போது பாமாயில், துவரம் பருப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் விரைவில் அவை நிறுத்தப்பட இருப்பதாக சமூகவலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.

 

ஏற்கெனவே உளுத்தம் பருப்பு நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் அது வழங்கப்படுமா எனத் தெரியவில்லை. இதனால் மக்கள் குழப்பத்தில் இருந்த நிலையில், பாமாயில், துவரம் பருப்பை நிறுத்தும் திட்டமில்லை, அது வதந்தி என்று மாநில அரசு விளக்கம் அளித்துள்ளது.


கொலை மிரட்டல்.. கஞ்சா கருப்பு மீது போலீசில் புகார்..!

டிகர் கஞ்சா கருப்பு தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக மதுரவாயல் காவல்நிலையத்தில் அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

 

மதுரவாயலில் உள்ள வீட்டின் கதவு உடைக்கப்பட்டு கலைமாமணி விருது திருடப்பட்டு இருப்பதாக கஞ்சா கருப்பு புகார் அளித்திருந்தார். இந்நிலையில், அந்த வீட்டின் உரிமையாளர் ரமேஷ், ஆன்லைன் மூலம் கஞ்சா கருப்பிடம் இருந்து வீட்டை மீட்டு தரும்படி புகார் அளித்துள்ளார்.