அதிமுகவினர் வைத்த விளம்பர பதாகை.. மாநகராட்சி எடுத்த முடிவு..!
ஈரோட்டில் உரிய அனுமதி பெறாமல் மேம்பாலம் மீது அதிமுகவினரால் வைக்கப்பட்ட மாநாட்டு விளம்பர பதாகையை மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர். மதுரையில் வரும் இருபதாம் தேதி அதிமுக சார்பில் எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதற்காக தமிழகம் முழுவதும் அதிமுகவினர் விளம்பர பதாகைகளை ஆங்காங்கே வைத்து வருகின்றனர். அந்த வகையில் ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானாவில் உள்ள மேம்பாலத்தில் மாநாடு தொடர்பான விளம்பர பதாகை வைக்கப்பட்டது. இதை அறிந்த மாநகராட்சி ஊழியர்கள் அதனை அகற்றினர்.





