அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜன.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு..!
அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதிமுகவில் பொதுக்குழு தொடர்பான வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணை ஜனவரி 4ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக உத்தரவிட்டது.
குறைந்தபட்சம் விடுமுறைக்கு பின் உடனடியாக விசாரணை செய்ய வேண்டும் என இபிஎஸ் தரப்பு தெரிவித்துள்ளது. இடைக்கால மனுவை விசாரணை செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.





