கரூரில் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், வரும் 10-ஆம் தேதி முதலமைச்சர் விஜய், கரூர் செல்ல இருப்பதாகவும், அப்போது பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு வேலை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளதாகவும் தகவல் வெளியான நிலையில் இதற்கு எதிராக தி.மு.க சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வருகிறது.