எதிர்க்கட்சிகள் புலம்பிக்கொண்டே தான் இருப்பார்கள் – அமைச்சர் ராஜேஷ் குமார்
சோஃபா மாடல் அரசு என்ற எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் பதிலடி கொடுத்துள்ளார். அவர் பேசியதாவது, இப்போது இருக்கும் அரசு மக்கள் ஜனநாயகத்தின் மிகப்பெரிய புரட்சி. இது லஞ்சம், லாவண்யம் அற்ற அரசு. நிறைய புரட்சிக்கரமான விஷயங்கள் செய்வது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
அவர்கள் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். ஒரு நல்ல அரசாங்கம், மக்களோட அரசாங்கம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. எதிர்க்கட்சிகள் புலம்பிக் கொண்டே இருப்பார்கள். அவர்கள் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றார்.





