தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 12ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும்..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வருகின்ற 12ஆம் தேதி கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து செய்தி குறிப்பில் தமிழக கடலோரப் பகுதியில் நிலவும் கிழக்கு திசை காற்று வேக மாறுபாடு காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.






