உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜி, சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் முதலில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், மருத்துவர்களின் பரிந்துரையின்பேரில், ஓமந்தூரார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைதாகி புழல் சிறையில் இருக்கும் அவருக்கு, திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.