பிரதமர் மோடியின் படத்தை எரிக்க முயற்சி..!
ஹரியானாவில் விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பஞ்சாபில் ஆம் ஆத்மி கட்சியின் மகளிரணியினர் மோடியின் உருவ படத்தை தீயிட்டு எரித்ததனால் பரபரப்பு ஏற்பட்டது.
ஹரியானாவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீது அந்த மாநில பாஜக அரசு தடியடி நடத்தி அடக்குமுறையைக் கையாண்டதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதேநேரம் மோடி அரசை கண்டித்து விவசாயிகள் தாக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன முழக்கங்களை எழுப்பி உள்ளனர். தடையை மீறி குவிந்த மகளிர் அணியினரை போலீசார் தண்ணீரை பீச்சி அடித்து விரட்டியதால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.






