நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை விண்ணப்பம் தள்ளுபடி..!
வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன் மற்றும் அவரது நண்பரின் பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நடிகை பட்டியல் இனத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூகவலைதளத்தில் வெளியிட்டதால் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் காவல்துறையிடம் புகார் அளித்தனர்.
இதன் அடிப்படையில் கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுன் மற்றும் அவரது நண்பர் சாம் அபிஷேக்கை ஆகஸ்ட் 14ஆம் நாள் போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த நிலையில் மீரா மிதுன் அவரது நண்பரின் பிணை விண்ணப்பத்தை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.






