தேர்தல் விதிகளை மீறியதாக குஷ்பு மீது வழக்குப் பதிவு..!
தேர்தல் விதிகளை மீறியதாக ஆயிரம் விளக்கு தொகுதி பாஜக வேட்பாளர் குஷ்பு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிடும் குஷ்புவிற்கு மயிலாப்பூர் தொகுதியில் ஓட்டுரிமை உள்ளது.
இந்த நிலையில் தேர்தல் வாக்கு பதிவுக்கு மந்தைவெளி தனியார் பள்ளிக்கு பாஜக கொடி கட்டப்பட்ட காரில் குஷ்பு சென்றுள்ளார். தேர்தல் விதிகளின்படி வாக்குச் சாவடியில் இருந்து 100 அடி தூரத்தில் சின்னங்கள் இருக்கக்கூடாது என்பதால் கட்சி கொடியுடன் வாக்குச்சாவடி சென்றதாக குஷ்பு மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.






