தர்மபுரி மாவட்டத்தில் கிராமப்புற மக்களுக்கு கபசுர குடிநீர் மற்றும் முககவசம் வழங்கப்பட்டது
உலகத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாத்துக்கொள்ள பொதுமக்களுக்கு முகக் கவசங்கள் மற்றும் “கபசுர”குடிநீர்., சமூக ஆர்வலர்களால் வழங்கப்பட்டது…தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி ஒன்றியம்.. மானியத அள்ளி பஞ்சாயத்து பொடாரன் கொட்டாய் கிராமத்தில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய கபசுர குடிநீர் சமூக ஆர்வலர்
கி.சம்பத் குமார் வழங்கினார்.

மேலும் இதில் பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப்பொதுச் செயலாளர் S.P.வெங்கடேஸ்வரன் மற்றும் முன்னாள் தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டு கபசுர குடிநீர் மற்றும் முக கவசங்களை வழங்கினார்கள்.






