மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தொடர்பாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். இடைத்தேர்தலில் போட்டியிடுவது, வேட்பாளர்களைத் தேர்வு செய்வது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு தொகுதிகளைச் சேர்ந்த திமுக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.