முதல் காதலனை 2வது காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே இரண்டாவது காதலனுடன் சேர்ந்து முதல் காதலனை கொலை செய்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவர் கடந்த 18ஆம் தேதி கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

 

போலீசார் நடத்திய விசாரணையில் இவர் ஆரணி சைதாப்பேட்டையை சேர்ந்த கிருஷ்ணவேணி என்ற பெண்ணை 8 ஆண்டுகளாக காதலித்து வந்ததும் திருமணத்திற்கு மறுத்த கிருஷ்ணவேணி அதே பகுதியை சேர்ந்த அஜித்குமார் என்பவருடன் பழகியதாகவும் கூறப்படுகிறது.

 

இதற்கு சுரேஷ் எதிர்ப்பு தெரிவித்ததால் கிருஷ்ணவேணியும், அஜித்குமாரும் அவரை ஏமாற்றி வரவழைத்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து அஜீத் குமாரை நேற்று கைது செய்த போலீசார் கிருஷ்ணவேணியை தேடிவருகின்றனர். கைதான அஜித்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Leave a Reply