சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு சரவணன் தெருவைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவியும் ஒன்பது ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளது.
இதனிடையே வீட்டு பால்கனியில் நின்று தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
காதலிப்பதற்காகவே தற்போது இதை செய்கிறார்கள் : விக்ரம்
பொன்னி சீரியல் புகழ் வைஷ்ணவிக்கு சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்பட்ட காயம்..!
அப்பா, மகளை சுட்டுக் கொன்று, இளைஞர் தற்கொலை..!
சபாநாயகர் என் வாயை திறக்க விடுவதே இல்லை : ராகுல்
வரதட்சணை கேட்டு கர்ப்பிணி கொலை.. கோர்ட் அதிரடி தீர்ப்பு..!
இந்தியா- சீனா இடையே 5 ஆண்டுகள் தடை நீக்கம்?