சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து ஒன்றரை வயது குழந்தை தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொண்டித்தோப்பு சரவணன் தெருவைச் சேர்ந்த அருண் என்பவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி ஜெயஸ்ரீ என்ற மனைவியும் ஒன்பது ஒன்றரை வயதில் இரண்டு குழந்தைகளும் இருந்துள்ளது.
இதனிடையே வீட்டு பால்கனியில் நின்று தனது குழந்தைக்கு உணவு ஊட்டிக் கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அதிலிருந்த குழந்தை மூன்றாவது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை பொதுமக்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகள் :
கிணற்றுக்குள் இருந்த முதலை.. பதறிய விவசாயி..!
கணவன் தெரியாமல் விட்ட வார்த்தை.. இரண்டு உயிர்கள் பலி..!
ஆசை ஆசையாய் சாப்பிட்ட முறுக்கு.. தொண்டையில் சிக்கி குழந்தை பலி..!
பைக்கில் வீலிங் செய்து அட்டூழியம்.. மூதாட்டி மீது மோதி விபத்து..!
ஆளுநர் வழக்கு விசாரணை - தமிழிசை வரவேற்பு
வெறி நாய் கடித்த 12 வயது சிறுவன் உயிரிழப்பு..!