துண்டு போல கழுத்தில் பாம்பை போட்டு பிரச்சாரத்திற்கு மத்தியில் பரபரப்பை கிளப்பிய இளைஞர்..!
சேலம் மாவட்டம் கோட்ட கவுண்டன்பட்டியில் திமுக வேட்பாளர் செல்வகணபதி பரப்புரையில் ஈடுபட்ட பொழுது அதே பகுதியில் இளைஞர் ஒருவர் தனது கழுத்தில் துண்டு போல பாம்பு ஒன்றை போட்டுக்கொண்டு அந்த பகுதியில் சுற்றி வந்தார். இதனால் அங்கிருந்த மக்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.





