ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் மாளிகை வண்ண விளக்குகளால் ஜொலிப்பு..!
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகை மற்றும் மத்திய அரசுத் துறைகளின் கட்டிடங்கள் வண்ண விளக்குகள் ஒளிர பட்டுள்ளன.
ஊரடங்கால் தலைநகர் டெல்லி எந்தவித ஆரவாரமும் இன்றி புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தயார் படுத்திக்கொண்டு உள்ளது. குடியரசுத் தலைவர் மாளிகை மூவர்ணக் கொடியில் உள்ள நிறங்களை பிரதானமாகக் கொண்ட வண்ண விளக்குகளால் ஒளியூட்டப்பட்டுள்ளது.
டெல்லி மத்திய அரசின் பல்வேறு துறைகளின் அலுவலகங்களை கொண்டுள்ள சவுத் பிளாக் கட்டடங்கள் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஜொலிக்கின்றன.






