விஜய் அஞ்சுகிறாரோ என்று எண்ணும் தமிழிசை..!
மணிப்பூர் விவகாரத்தில் தவெக தலைவர் பாஜக அரசை குற்றம்சாட்டியிருக்கிறாரே என்று தமிழிசை சௌந்தரராஜனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “விஜய் திமுகவை விமர்சனம் செய்வதை வரவேற்கிறேன்.
அப்படி செய்வதால், அவரை ‘சங்கி’ என்று ஸ்டாம்ப் குத்திவிடுவார்களோ என்று அஞ்சுகிறார் போல. எனவேதான் மணிப்பூர் குறித்தும் சொல்லிவைப்போம் என்று சொல்லியிருக்கிறார்” என பேசியிருக்கிறார்.





