கடலுார் புதுப்பாளையம் பகுதியில் தரைகாத்த காளியம்மன் கோயிலில் ராகு கால பூஜையின் போது ஏராளமான பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது கோபுர கலசத்தின் மீது மின்னல் தாக்கி சேதமாகி அடியோடு பெயர்ந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.