மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்றார் பிரதமர் மோடி..!
தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொரோன பாதிப்பு நிலவரம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். அப்போது தமிழக அரசை கட்டுப்படுத்த மாநில அரசின் நடவடிக்கைகளுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பை முதலமைச்சர் மு க ஸ்டாலின் கூறினார்.
தமிழகத்தில் ஆக்சிஜன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் தமிழகத்திற்கான ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 500 டன் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இந்த கோரிக்கையை உடனடியாக பரிசீலிப்பதாக பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார்.
கொரோனா நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சரின் வேண்டுகோளை ஏற்று மத்திய அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் கொரோனா பரிசோதனைகளை தொடர்ந்து அதிகளவில் மேற்கொள்ள வேண்டும் என்றும் அதிகம் பாதிப்பில்லாத நோயாளிகளை வீட்டிலேயே இருக்கச் செய்து கண்காணிக்க வேண்டும் என்றும் பிரதமர் கேட்டுக்கொண்டுள்ளார். அதற்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக முக ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.






