இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் – பிரகாஷ் ராஜ்
இளைஞர்கள் தவறு செய்யும்போது பெரியவர்கள் அவர்களை கண்டித்து திருத்த வேண்டுமே தவிர, காவல்துறை மூலமாக வழக்குப் பதிவு செய்து அவர்களை துன்புறுத்தக் கூடாது. நாட்டின் சீர்குலைந்த கட்டமைப்பு மற்றும் போலீஸ் அத்துமீறல்களால் விரக்தியடையும் இளைஞர்களின் ஆதங்கத்திற்கு அரசும் பொறுப்பேற்க வேண்டும்.
மாணவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுத்தால், அது அவர்களின் எதிர்காலத்தையும், பெற்றோர் மற்றும் குடும்பத்தினரையும் கடுமையாகப் பாதிக்கும். அவர்கள் நம் நாட்டின் குழந்தைகள், அன்போடு அவர்களை அணுகுங்கள். அவர்களின் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் சீரழித்துவிடாதீர்கள் என்று பிரதமர் மோடியின் வீடியோவை குறிப்பிட்டு நடிகர் பிரகாஷ் ராஜ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.



