மாணவர்களுடன் பயணித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
சென்னையில் பள்ளி மாணவர்களுக்காக கூடுதலாக இரண்டு பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் மாணவர்களுடன் சேர்ந்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பயணித்தார்.
கொட்டிவாக்கம் ஒய்எம்சிஏ மேல்நிலைப்பள்ளி மாநகரின் கோரிக்கையை ஏற்று கூடுதல் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. ஒய் எம் சி ஏ பள்ளியிலிருந்து கல்லு குட்டை மற்றும் கண்ணகி நகருக்கு புதிய வழித்தடங்களில் பேருந்து சேவைகள் இயக்கப்படுகிறது. புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்த பின்னர் மாணாக்கருடன் அமைச்சர் சுப்பிரமணியன் பயணம் செய்தார்.





