நண்பரின் திருமணத்திற்கு வித்தியாசமாக போஸ்டர் ஒட்டிய நண்பர்கள்..!
ராமநாதபுரம் மாவட்டம் முள்ளுவாடியில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் ஒன்று நகைப்பை ஏற்படுத்தியுள்ளது. கொரொனாவை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அந்த போஸ்டரில் மணமகனான ஆசிரியருக்கு தொற்று உறுதியாகி இருப்பதாகவும் அவரை மணமகள் தொற்றிக் கொண்டதா கவும் குறிப்பிட்டிருக்கிறார்கள்.
சானிடைசர் சபரி, விலகிஇரு விக்னேஷ், இருமல் இளங்கோ, மூச்சுத்திணறல் முத்து என போஸ்டரை உருவாக்கி அவர்களின் பெயரும் வித்தியாசமாக நீண்டு கொண்டே போகிறது.






