டெல்லியில் குறைந்து வரும் கொரொனா தொற்று..!
டெல்லியில் கொரொனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் அங்கு தளர்வுகள் அறிவிக்கப்படுகின்றன. தொழிற்சாலை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அதே நேரம் ஆந்திராவில் கொரொனா ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த மே ஐந்தாம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது.
தொடர்ந்து நோய்த்தொற்று குறித்து ஆய்வு செய்து அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி முழு ஊரடங்கை வரும் பத்தாம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளார்.






