போதைப்பொருள் ஒழிப்பு- சட்டம் ஒழுங்கு குறித்து விஜய் ஆலோசனை
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பது மற்றும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாகத் தடுப்பது குறித்து, தமிழக முதல்வர் விஜய் அவர்கள் விரைவில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தை நடத்த உள்ளார்.
அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க எடுக்க வேண்டிய கடும் நடவடிக்கைகள், குற்றச் சம்பவங்களைக் குறைப்பதற்கான உத்திகள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட உள்ளது.





