வீராங்கனைக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார்..!
சென்னையில் தடகள வீராங்கனைக்கு பாலியல் தொல்லை தருவதாக தனியார் தடகள தலைமை பயிற்சியாளர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. பாரிமுனையில் பிரைம் ஸ்போர்ட்ஸ் தடகள பயிற்சி அகாடமி நடத்திவரும் நாகராஜன் பயிற்சியில் ஈடுபடும் தடகள வீராங்கனைகள் பலரிடமும் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்ததாக புகார் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக வலைதளங்களில் சில ஆடியோக்களும் வெளியாகின. நாகராஜன் மீது பாதிக்கப்பட்ட பெண்கள் தடகள சங்கத்தில் புகார் அளித்துள்ளனர். ஆதாரங்களைக் கொண்டு போலீசார் விசாரணையை துவக்கியுள்ளனர்.






