மதுரையில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு..!
பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில் மதுரையில் தடையை மீறி கொண்டாட்டத்தில் ஈடுபட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நள்ளிரவில் பட்டாசு வெடிப்பது, கேக் வெட்டியது, இருசக்கர வாகனங்களை தலைக்கவசம் இன்றி இயக்கியது, அதி வேகமாக வாகனங்களை இயக்கியது, மது போதையில் வாகனங்களை இயக்கியது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து உணவகங்களில் விற்பனையில் ஈடுபட்டது உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.






