தலைக்கேறிய மது போதை நண்பனை இரும்பு கம்பியால் தாக்கிய நபர்..!
சென்னையில் மது போதையில் ஏற்பட்ட தகராறில் சக நண்பரை இரும்பு கம்பியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். ஆர்கே நகர் பகுதியில் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் தனது நண்பர் பாபுவை இரும்பு கம்பியால் தாக்கி தப்பி சென்றுள்ளார்.
இந்நிலையில் அக்கம் பக்கத்தினர் பாபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். பதிவு செய்து விசாரணை நடத்தியதில் காவல் நிலையத்தில் சீ பிரிவு குற்றவாளியாக மணிகண்டன் இருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.





