முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்தவருக்கு சிறை தண்டனை..!
முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்த தொழிலாளிக்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த பகுதியை சேர்ந்த குணசேகரன் 2010 ஆம் ஆண்டு முதல் மனைவிக்குத் தெரியாமல் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இதுதொடர்பாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சத்யா புகார் அளித்திருந்தார்.
இதனிடையே கடந்த சில மாதங்களுக்கு முன் முதல் மனைவி சத்யா மரணமடைந்த நிலையில் குணசேகரனுக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும், 1000 ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.






