முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்துள்ள கமல்ஹாசன்..!
கடந்த 20ஆம் தேதி பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளை காக்க கண்மணிகளை காப்போம் என தமிழக முதல்வருக்கு அறிக்கை மூலமாக கோரிக்கை வைத்திருந்தேன்.
இந்த நிலையில் அந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வைப்பு நிதி மற்றும் படிப்புச் செலவுகளை அரசே ஏற்கும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளதை வரவேற்கிறேன், பாராட்டுகிறேன் என மக்கள் நீதி மய்யம் கமல் ஹாசன் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.







