முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும்..!
பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தாலே முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அயனாவரத்தில் பெருந்தொற்று தடுப்பூசி தொடர்பாக ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட பின் பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அரசியல் பொதுக்கூட்டங்களில் மட்டுமே பெருந்தொற்று பரவுகிறது என சொல்ல முடியாது என தெரிவித்தார்.






