தமிழகத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும்..! செங்கோட்டையனின் பதில்..!
பெற்றோர், கல்வியாளர்கள் உடன் ஆலோசித்து தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து முதலமைச்சர் பழனிசாமி முடிவு செய்வார் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை அமைந்தகரையில் கட்சிகளில் இருந்து பிரிந்தவர்கள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர் அதிமுக மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்றும், எதிர்க்கட்சிகளின் எண்ணம் பகல் கனவாக மட்டும் இருக்கும் என்று தெரிவித்தார்.






