தசரா பண்டிகையை முன்னிட்டு ஒரு கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு அலங்கரிக்கப்பட்ட அம்மன்..!
தசரா பண்டிகையை முன்னிட்டு தெலுங்கானாவில் சுமார் ஒரு கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை கொண்டு அம்மன் அலங்கரிக்கப்பட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஹைதராபாத்துக்கு அருகிலுள்ள வாசவி கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் ரூபாய் நோட்டுகளால் செய்யப்பட்ட ஒரு கோடிபூக்கள் கொண்டு அம்மன் சன்னதி அலங்கரிக்கப்பட்டது. அலங்காரம் செய்வதற்கு பக்தர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டு பூஜைக்கு பிறகு அவர்களிடமே திருப்பி தரப்படும் என்று கோவில் பொருளாளர் ராமு தெரிவித்துள்ளார்.






