யுபிஎஸ்சி தேர்வை ஒத்திவைக்க முடியாது..!
பருவமழை பாதிப்புகளை காரணம் காட்டி மத்திய அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வுகளை ஒத்தி வைக்க முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இது குறித்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் அமர்வு யுபிஎஸ்சி தேர்வு இந்த முறை எழுத முடியாத மாணவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பை வழங்கலாம் என்று அரசுக்கு ஆலோசனை அளித்துள்ளதாக தேர்வு எழுதுபவர்கள் நலன் கருதி பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யுபிஎஸ்சி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
யுபிஎஸ்சி தேர்வுகள் வரும் 14ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் அதை 6 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். முன்னதாக நீட் தேர்வுகளை ஒட்டி வைக்கவும் உச்சநீதிமன்றம் மறுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.






