மகனை அடித்தவர்களை தட்டி கேட்ட தந்தையை அடித்த குடும்பம்..!
கடலூர் மாவட்டத்தில் மகனை அடித்தவர்களை தட்டி கேட்க போன தந்தையும் தாக்கப்பட்டதை தொடர்ந்து வீட்டிற்கு வந்த அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். காட்டுமன்னார்கோயில் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளி கருணாகரன்.
அவரது மனைவி கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவரின் புகைப்படத்தை செல்போனில் வைத்துள்ளார். அதனை அறிந்த பெண் வீட்டார் கார்த்திகை அடித்துள்ளனர். மகனை அடித்தது குறித்து கேட்க போன கருணாகரனை பெண்வீட்டார் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் காவல் துறையில் புகார் அளித்துள்ளனர்.





