எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல.. பேனர் வைத்த கணவன் -மனைவி
நெல்லையில் சேரன்மகாதேவியில் தங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என்று வீட்டு வாசலில் வைத்த பேனருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் சேர்ந்தவர்கள் சாமுவேல், செல்வி. இவர்கள் தனது வீட்டு வாசலில் எங்கள் ஓட்டு விற்பனைக்கு அல்ல என பேனர் வைத்துள்ளார்.
வாக்களிப்பது எங்கள் உரிமை. வாக்களிப்பது எங்கள் ஜனநாயக கடமை என குறிப்பிட்டு விழிப்புணர்வு பேனர் வைத்துள்ளார். இந்த செயல் புதிய வாக்காளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே பாராட்டை பெற்றுள்ளது.





