கிணற்றில் குதித்த தாய்.. வாய் பேச முடியாமல் தவித்த மகன்..!
சென்னை அடுத்த ஆவடி அருகே உடல் நலக்குறைவு காரணமாக மன உளைச்சலில் கிணற்றுக்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற தாயை காப்பாற்றுவதற்கு வாய் பேச முடியாத அவரது மகனும் உள்ளே குதித்த நிலையில், இருவரையும் தீயணைப்பு துறையினர் உயிருடன் மீட்டனர்.
30 அடி ஆழமுள்ள கிணற்றுக்குள் தண்ணீர் குறைவாக இருந்ததால் இருவரும் மூழ்காமல் இருந்தனர்.





