தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பு..!
தமிழகத்தில் சேலம், கிருஷ்ணகிரி, திருவாரூர், திருப்பத்தூர், விழுப்புரம் மாவட்டங்களை பரவலாக மழை பெய்தது. திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் மூன்றாவது நாளாக நேற்று கனமழை பெய்தது.
திருவாரூர், நன்னிலம், மாப்பிள்ளைக்குப்பம், சன்னாநல்லூர், குடவாசல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த சூறை காற்றுடன் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
சேலம் மாவட்டம் ஆஸ்தம்பட்டி ஏற்காடு சூரமங்கலம், அயோத்தியாபட்டினம் உள்ள நகரின் பல்வேறு பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இடியுடன் மழையால் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது.





