திருப்பதியில் அதிகாலை 5.30 முதல் 11 மணி வரை தரிசனம் ரத்து..!
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றது. திருப்பணி ஏழுமலையான் கோயிலில் வரும் 17ஆம் தேதி ஆனிவார ஆஸ்தான நிகழ்ச்சி எனப்படும் வரவு செலவு கணக்கு தொடங்கப்படும்.
இதை தொடர்ந்து நடைபெற உள்ளதை முன்னிட்டு கோவில் முழுவதையும் சுத்தப்படுத்தும் ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி நடைபெற்றது, அதிகாலை 5.30 மணி முதல் 11 மணி வரை பக்தர்களுக்கான தரிசனம் ரத்து செய்யப்பட்டது.





