அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கு நாளை விசாரணை..!
அதிமுக பொதுக்குழு தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. அதிமுக தலைமை விவகாரத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இருவரும் இணைந்து செயல்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிசாமி மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார்.
மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த கூடுதல் நீதிபதிகள் துரைசாமி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரணைக்கு வந்தன. மூன்று மேல்முறையீட்டு மனுக்களிலும் தனி நீதிபதியின் சான்றளிக்கப்பட்ட உத்தரவின் நகல் இல்லாமல் விசாரணைக்கு ஏற்க வேண்டும் என பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோரிக்கை உத்தரவை ஏற்று நீதிபதிகள் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் மேல்முறையீட்டு மனுக்களை விசாரிக்க பதில் அளித்ததோடு 3 மனுக்கள் நாளை விசாரணைக்கு பட்டியலிடும் என பதிவுத்துறை உத்தரவிட்டனர்.





