பெண்ணை கடத்தி சென்று கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது..!
சென்னையில் பெண்ணை கடத்தி சென்று கத்திமுனையில் கூட்டு பலாத்காரம் செய்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன்தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்து உள்ளார்.
போரூர் எடுத்து ஐயப்பன்தாங்கல் குளத்து வாஞ்சி ஏரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கார் டிரைவரை தாக்கிய விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரில் கடத்தி சென்று கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது.
பின்னர் அந்த பெண்ணிடம் 8 பவுன் நகையை பறித்துக்கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றுள்ளனர்.





