--- --:--:-- --

கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற திருநங்கை..!

7

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் நீதிமன்ற வளாக கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற மயங்கிய நிலையில் இருந்த திருநங்கையை பெண் காவலர் ஒருவர் அப்படியே தூக்கி கொண்டு போய் மருத்துவமனையில் சேர்த்துள்ளார்.

 

திருநங்கை செல்வராஜ் என்ற செல்வி தனது தம்பி முத்துக்குமார் மீது பொய் வழக்கு போடுவதாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனைப் பெரிதாக கருதாத நிலையில் திருநங்கை சாத்தான்குளம் நீதிமன்றம் உள்ளே சென்று முறையிட்டுள்ளார்.

 

அப்போதும் பலன் இல்லாததால் அங்கு தங்கியிருந்த பெண் காவலர் ஒருவர் அப்படியே அலேக்காக தூக்கி கொண்டுபோய் மருத்துவமனையில் சேர்த்தார். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon