பள்ளி சிறுமியை கர்ப்பமாக்கிய கூலித் தொழிலாளி கைது
கோவையில் பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து கர்ப்பமாக்கியதாக போக்கு சட்டத்தின்கீழ் ஒருவன் கைது செய்யப்பட்டான். குனியமுத்தூர் அரசு பள்ளியில் படித்து வந்த 16 வயது சிறுமியை காக்கா சாவடியை சேர்ந்த வெள்ளியங்கிரி என்ற கூலித்தொழிலாளி கடந்த ஜூன் மாதம் கட்டாயப்படுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் வெளியே சொல்லக் கூடாது என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனிடையே மாணவி ஆறு மாதம் கர்பமாக இருப்பது பெற்றோருக்கு தெரியவந்தது. இதையடுத்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் வெள்ளியங்கிரி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




