தனியாக சென்று கொண்டிருந்த மூதாட்டியிடம் செயின் பறிப்பு
சேலம் மாவட்டம் அம்மாபேட்டை பகுதியில் கிருஷ்ணன் கோவில் தெரு பாலத்தின் அடியில் கடந்த 10-2-2020ஆம் தேதி இரவு 9.15 மணிக்கு மூதாட்டி நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது கொள்ளையர்கள் மூதாட்டியின் செயினை பறித்து சென்றுள்ளனர்.
இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. தற்போது அதன் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.இது குறித்து காவல்துறையினர் தற்போது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




