பிப்ரவரி 9ம் தேதி சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள கால்நடை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டுகிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற துறை ரீதியான ஆய்வுக்கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பங்குபெற்றார்.
அப்பொழுது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பிப்ரவரி 9-ம் தேதி சேலம் மாவட்டத்தில் அமைய உள்ள மிகப்பெரிய கால்நடை பூங்காவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அடிக்கல் நாட்டுவதாக கூறினார்.மேலும் அதைத் தொடர்ந்து 2 நாட்களுக்கு கால்நடைகளுக்கான சிறப்பு திருவிழா நடைபெற இருப்பதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




