நடிகர் யோகிபாபு விடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த தயாரிப்பாளர் போஸின் அலுவலகம் வடபழனி என்ஜிஓ காலனியில் உள்ளது. இவரது நிறுவனம் ரவி சங்கர் இயக்கத்தில் அலிபாபாவும் 40 குழந்தைகளும் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க கால்ஷீட் வாங்கி தருவதாக போஸின் நண்பர் அண்ணாதுரை 10 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று உள்ளார். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் பெற்று தராத அண்ணாதுரை பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து போஸ் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அண்ணாதுரை மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரபல நடிகை விசித்ரா..!
திருவாடானை அருகே பல மாதங்களாக வீணாகும் குடிநீர்: குடிநீர் வடிகால் வாரியத்தின் அலட்சியத்தால் பொதுமக்...
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
பசுமைத் தாமிர ஆலைக்கு அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் ஐகோர்ட்டில் வழக்கு - தமிழ்நாடு அரசு எதிர்ப்பு
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






