நடிகர் யோகிபாபு விடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை சிட்லபாக்கம் பகுதியை சேர்ந்த தயாரிப்பாளர் போஸின் அலுவலகம் வடபழனி என்ஜிஓ காலனியில் உள்ளது. இவரது நிறுவனம் ரவி சங்கர் இயக்கத்தில் அலிபாபாவும் 40 குழந்தைகளும் படத்தை தயாரித்து வருகிறது.
இந்த படத்தில் யோகிபாபுவை நடிக்க வைக்க கால்ஷீட் வாங்கி தருவதாக போஸின் நண்பர் அண்ணாதுரை 10 லட்சம் ரூபாய் முன்பணம் பெற்று உள்ளார். ஆனால் யோகிபாபுவின் கால்ஷீட் பெற்று தராத அண்ணாதுரை பணத்தையும் திருப்பித் தராமல் ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து போஸ் சென்னை வடபழனி காவல் நிலையத்தில் அண்ணாதுரை மீது புகார் அளித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
எலக்ட்ரிக் பைக்கில் வந்த முதியவருக்கு நேர்ந்த சோகம்..!
மின்னல் வேகத்தில் வந்த பைக்.. நடந்த பயங்கரம்..!
50 கிலோ கெட்டுப்போன திண்பண்டத்தை அழித்த உணவு பாதுகாப்பு அதிகாரிகள்..!
திமுக வேட்பாளர் பெயரை கொண்டவர் சுயேட்சையாக போட்டி..!
பல இடங்களில் கத்தி குத்து..ரத்த வெள்ளத்தில் மனைவி..!
மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் 1403 பேர் வேட்பு மனுக்கள் தாக்கல்..!