சென்னை வள்ளுவர் கோட்டத்தில் மத்திய சென்னை நாடாளுமன்ற உறுப்பினருக்கான அலுவலக கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது. இந்த அலுவலகத்தை திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்.
அப்போது நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய தயாநிதிமாறன் மக்கள் தங்கள் குறைகளை வாட்ஸப், தொலைபேசி மற்றும் நேரில் வந்து தெரிவித்தால் உடனடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.
திமுக ஆட்சிக்கு வருவதை மக்கள் விரும்பவில்லை என பொன்ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து குறித்து கேட்டதற்கு மக்கள் விரும்பாத பொன்ராதாகிருஷ்ணன் தங்களை பற்றி விமர்சிப்பது நகைச்சுவையாக உள்ளது என கூறினார்.