நேற்றிரவு முதல் முடங்கியிருந்த பேஸ்புக், இன்ஸ்டாகிராம் வாட்ஸ்அப் செயலிகள் ஆறு மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் செயல்படத் தொடங்கின. பேஸ்புக் நிறுவனத்திற்கு சொந்தமான பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்களை உலகில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்திய நேரப்படி இரவு 9.30 மணி அளவில் இருந்து உலகம் முழுவதும் இந்த சேவை முடங்கியதால் வாடிக்கையாளர்கள் அவதி அடைந்தனர். பேஸ்புக் நிறுவனம் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்படும் என கூறியிருந்தனர் .
இந்த நிலையில் ஆறு மணி நேரத்திற்கு பிறகு காலை சுமார் 4 மணியளவில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் வலைதளங்கள் அடுத்தடுத்து செயல்படத் துவங்கின. இதுகுறித்து ட்விட்டர், பேஸ்புக் பதிவில் உலகெங்குமுள்ள பயனாளர்களுக்கு மன்னிப்பு கோருவதாக பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சேவைகளை முழு அளவில் மீண்டும் வழங்க கடுமையாக பணியாற்றி வருவதாகவும் தொடர்ந்து முழு சேவை மீண்டும் வழங்கப்பட்டு வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இதன் காரணமாக பேஸ்புக் இன்ஸ்டாகிராம் வாட்ஸ் அப் செயலி எதற்கு முடங்கியது என்பது குறித்து அந்த நிறுவனம் விளக்கம்
அளிக்கவில்லை.