தண்ணீரை சேமிக்கும் பொறுப்பை மக்கள் உணராவிட்டால் சென்னை உள்ளிட்ட பெரு நகரங்கள் போல் தென்னாபிரிக்காவின் கேப் டவுன் நகரம் போல கடும் வறட்சியால் பாதிக்கப்படும் என்று நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் கடந்த 2017ஆம் ஆண்டில் மிக கடுமையான வறட்சி ஏற்பட்டது. தண்ணீரே இல்லாத நகராக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாட்டில் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் தனிநபருக்கு கிடைக்கக்கூடிய சராசரி நீரின் அளவும் குறைந்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீரை சேமிக்க வேண்டிய தங்கள் பொறுப்பை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவ்வாறு இல்லையெனில் சென்னை, பெங்களூரு உள்ளிட்ட பெருநகரங்கள் கேப்டவுனாக மாறிவிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு..!
அர்ச்சகர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500 ஆக உயர்வு..!
தனியார் பள்ளிகளுக்கு 52 நாள்கள் விடுமுறை..!
வருங்கால முதல்வரே.. நயினார் நாகேந்திரனுக்கு போஸ்டர்..!
பில்ட் இன்டெக் கண்காட்சி கோவை கொடிசியாவில் ஏப்ரல் 20-ல் தொடக்கம்!
கருணாநிதி நினைவிடத்தில் கோபுர அலங்காரம் - எதிர்க்கட்சிகள் கண்டனங்கள்